×

மூதாட்டி சாவில் திருப்பம் கொலை செய்யப்பட்டது உறுதி

புழல்: செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் அம்பேத்கர் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் முனியம்மாள் (65). அதே பகுதியில் சிறிய மளிகை கடை நடத்தி வந்தார். பொழுதுபோக்குக்காக அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிப்பது வழக்கம். மீன்பிடித்து வரும்போது  கடந்த 28ம் தேதி இவர் வீட்டு முன்பு உள்ள ஒரு வீட்டில் மர்ம ஆசாமிகள் ஓட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்த, மூதாட்டியை மர்ம ஆசாமிகள் கொலை செய்துவிட்டு தப்பிச்  சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  நேற்றுமுன்தினம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், முனியம்மாள் கொலை செய்யப்பட்டார் என உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்….

The post மூதாட்டி சாவில் திருப்பம் கொலை செய்யப்பட்டது உறுதி appeared first on Dinakaran.

Tags : Muniyammal ,6th Street ,Ambedkar Nagar ,Sengkunram ,Vlankatupakkam ,Tirupam ,
× RELATED ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீனின்...