×

தாக்கத்தை குறைத்துக் கொண்டு கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 2,539 பேருக்கு கொரோனா; 98 பேர் உயிரிழப்பு.!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,539 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,01,477-ஆக உயர்ந்தது.* புதிதாக 60 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,16,132-ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 4,491-பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,54,546-ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.73% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.07% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30,799 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.*இந்தியாவில் 1,80,80,24,147 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 17,86,478 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

The post தாக்கத்தை குறைத்துக் கொண்டு கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 2,539 பேருக்கு கொரோனா; 98 பேர் உயிரிழப்பு.! appeared first on Dinakaran.

Tags : Delhi ,corona ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...