×

தமிழ்நாடு முழுவதும் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி, ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்:* தென்மண்டல ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய அரசு பணியில் இருந்து திரும்பிய அஸ்ரா கர்க் தென்மண்டல ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். * மதுரை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.* நெல்லை மாநகர காவல் ஆணையராக சந்தோஷ்குமார் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். * மதுரை மாநகர காவல் ஆணையராக ஐ.ஜி. டி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். * சென்னையில் அமலாக்கப்பிரிவு  ஐ.ஜி.யாக ஏ.டி.துரைக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். * சென்னையில் நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.மல்லிகா நியமிக்கப்பட்டுள்ளார். * ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவலர்கள் நலப்பிரிவு ஐ.ஜி.யாக  நியமனம் செய்யப்பட்டுள்ளார். * ஊர்காவல்படை கூடுதல் கமாண்டன்டாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.* சென்னையில் காவல்துறை நடவடிக்கைகள் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார். 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு:தமிழ்நாடு முழுவதும் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி, * ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவலர்கள் நலத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். * ஒன்றிய அரசு பணியில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ஆயுஷ்மணி திவாரிக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. * ஒன்றிய அரசு பணியில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ்வர் தயாளுக்கும் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. * ஒன்றிய அரசு பணியில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி சுமித் சரணுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. * பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக உள்ள அபின் தினேஷ் மொடக்குக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. * ஐ.ஜி. சஞ்சய்குமார் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். * என்.கே.செந்தாமரைக்கண்ணன் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார். * ஐ.ஜி.யாக உள்ள வி.வனிதா பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னையில் ரயில்வே பணியில் ஏ.டி.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். …

The post தமிழ்நாடு முழுவதும் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : IPS ,Tamil Nadu ,Tamil Nadu Govt ,Chennai ,Tamil Nadu government ,Tamilnadu ,17 I.P.S. Tamil Nadu Govt ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...