×

பங்குனி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

வத்திராயிருப்பு: பங்குனி பவுர்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பங்குனி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் 15ம் தேதியிலிருந்து நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று பங்குனி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, அதிகாலை 2 மணி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதி முன்பு குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் பங்குனி பவுர்ணமியை முன்னிட்டு, சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சுவாமி பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்….

The post பங்குனி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Chathuragiri Sundaramakalingam ,Panguni Poornami ,Vathrayiru ,Swami ,Chaturagiri Sundaramakalingam ,Virudhunagar district ,Vathirayiru ,Chathuragiri Sundaramakalingam temple ,
× RELATED அரசு ஆஸ்பத்திரியில் வெப்ப அலை விழிப்புணர்வு