×

இரண்டு முறை கொலைவெறி தாக்குதலில் உயிர் தப்பினர் 2 ஆண்டுகள் காத்திருந்து ரவுடியை தீர்த்துக் கட்டிய 2 ரவுடிகள் கைது

* கொளத்தூர் கொலையில் பகீர் திருப்பம்பெரம்பூர்: இரண்டுமுறை தங்களை வெட்டிக்கொல்ல முயன்ற ரவுடியை இரண்டு ஆண்டுகள் காத்திருந்து பழிதீர்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பழனி (27). ஆட்டோ டிரைவரான இவர் மீது ராஜமங்கலம், கொளத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்றுமுன்தினம் இரவு மக்காரம் தோட்டம் வழியாக சென்றபோது பழனியை 2 பேர் கையில் கத்தியுடன் தூரத்தி வந்துள்ளனர். இதனால் பயந்து போன பழனி உயிர்பிழைக்க மக்காரம் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்துள்ளார். இருப்பினும் 2 பேரும்  விரட்டிச்சென்று பழனியை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பிறகு தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொளத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் சகாதேவன், ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். பின்னர் பழனியின் சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், கொளத்தூர்  வடக்கு ஜெகநாதன் நகர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் பதுங்கியிருந்த ஆதி என்ற ஆதிகேசவன், விக்கி என்ற விக்னேஷ் ஆகியோரை போலீசார் பிடித்தனர்.இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.கொளத்தூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் பழனி தாதாவாக வலம்வந்து மக்களை மிரட்டிவந்துள்ளார். இவருக்கு போட்டியாக ஆதி என்ற ஆதிகேசவன் விக்னேஷ் என்ற விக்கி ஆகிய இருவரும் ரவுடியாக வலம் வந்துள்ளனர். இதனால் அவர்கள் இடையே ஈகோ பிரச்னை உருவாகியுள்ளது. இதன்காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன் பழனி, ஆதி என்ற ஆதிகேசவனை   அம்பத்தூர் பகுதியில் மறித்து வெட்டிக்கொல்ல முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஆதிகேசவன், பல நாட்கள் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளார். இதுபோல் கடந்த 2018ம் ஆண்டு விக்கி என்கின்ற விக்னேஷையும் வெட்டிக்கொல்ல பழனி முயன்றபோது அவர் உயிர் தப்பினார். இதன்காரணமாக பாதிக்கப்பட்ட ரவுடிகள் இரண்டு பேரும் மற்றொரு ரவுடியான பழனி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். அவரை எப்படியாவது தீர்த்துக்கட்டவேண்டும் என்று சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான், நேற்றுமுன்தினம் ராஜமங்கலம் காவல் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த பழனியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், ஆதிகேசவன், விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post இரண்டு முறை கொலைவெறி தாக்குதலில் உயிர் தப்பினர் 2 ஆண்டுகள் காத்திருந்து ரவுடியை தீர்த்துக் கட்டிய 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Bagir Tirupamperambur ,Kolathur ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...