×

செல்போனில் ஆபாச படம் அனுப்பி மாணவிக்கு தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டராஜ் (42). இவர் தாராபுரம் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவி ஒருவருக்கு ஆசிரியர் மணிகண்டன்ராஜ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்காக உருவாக்கப்பட்ட தனி வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து அந்த மாணவியின் நம்பரை எடுத்து மாணவியின் செல்போனுக்கு ஆபாச வசனங்கள், ஆபாச போட்டோக்களை அனுப்பி உள்ளார். மேலும் இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என அவர் மாணவியை மிரட்டியதாக தெரிகிறது.இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் தாய் அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதன் பேரில் பள்ளியின் தலைமை ஆசிரியரின் நடவடிக்கையால் சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது . புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்லம் விசாரணை நடத்தி ஆசிரியர் மணிகண்டராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்….

The post செல்போனில் ஆபாச படம் அனுப்பி மாணவிக்கு தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pocso ,Tarapuram ,Manikandaraj ,Udumalai Gandinagar, Tiruppur district ,
× RELATED 3 வயது குழந்தையிடம் செக்யூரிட்டி சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் கைது