×

பொள்ளாச்சி அருகே 2 கார்களை பந்தாடிய காட்டு யானை

ஆனைமலை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார், நவமலை வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக ஆழியார் அணையை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் இரவு நவமலை ரோட்டில் 2 கார்கள் அடுத்தடுத்து வந்தன. முதலில் வந்த காரை நவமலை மின்வாரிய ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணன் (49) என்பவர் ஓட்டி வந்தார். 2வது காரில் அவரது உறவினர் வந்துள்ளார். 2 காரையும் ஒற்றை ஆண் காட்டு யானை வழிமறித்தது. இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஓட்டி வந்த காரை பந்தாடி பள்ளத்தில் உருட்டியது. இதில் சரவணன் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார். மற்றொரு காரையும் யானை பள்ளத்தில் தள்ளியது. ஆனால் கார் ஓரமாக நின்றுவிட்டது. அலறல் சத்தம் கேட்டு வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வந்து ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்டியடித்தனர். காரில் படுகாயத்துடன் கிடந்த சரவணனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்….

The post பொள்ளாச்சி அருகே 2 கார்களை பந்தாடிய காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Animalai ,Govai district ,Navamalai ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...