×

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ரூ.4.71 லட்சத்தில் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கினார்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் விஜயா ராணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பொதுமக்களிடம் இருந்து 106 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, நேற்றைய கூட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ₹4,50,000 மதிப்பிலான  திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ₹21,000 மதிப்புள்ள மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு சக்கர நாற்காலிகள் என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ₹4,71,000 மதிப்புள்ள நலதிட்டத் உதவிகளை கலெக்டர் விஜயாராணி வழங்கினார்.கூட்டத்தில், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) வே.சாரதா ருக்மணி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் பா.கியூரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தே.ஸ்ரீநாத், சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) ரா.ஜெய மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ரூ.4.71 லட்சத்தில் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : People's Day ,Chennai ,Chennai District Collector ,Office ,Collector ,Vijaya Rani ,People's Reducing Day ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!