×

வீட்டை உடைத்து 25 சவரன் கொள்ளை

திருப்போரூர்: திருப்போரூர் அருகே காயார் அடுத்த பனங்காட்டுப் பாக்கம் கிராமம், செங்கேணி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் யோகநாதன் (45). இவரது மனைவி சுமதி (42). நேற்று காலை யோகநாதன் வழக்கம்போல் வீட்டைப் பூட்டி விட்டு சித்தாள் வேலைக்கும், அவரது மனைவி சுமதி தனியார் நிறுவன வேலைக்கும் சென்று விட்டனர். குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர். மாலை 3 மணியளவில் அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது, யோகநாதனின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது.உடனே அவருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் வந்து பார்த்தபோது, அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 25 சவரன்  நகைகள், வெள்ளி கொலுசு, ₹1 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்….

The post வீட்டை உடைத்து 25 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Yoganathan ,Sengeni Amman temple street ,Kayar ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நாடகம்