- தண்டாயுதபாணி கோயில்
- Kumbabhishekam
- பூர்த்தரணை கிராமம்
- சேயூர்
- நாடுபலானி மராகத தண்டாயுதப்பணி கோயில்
- புரதாரனை கிராமம்
- தண்டாயுதபாணி கோயில் கும்பாபிசேகம்
- அவர்தரநாய் கிராமம்
செய்யூர்: செய்யூர் அருகே பெருக்கரணை கிராமத்தில் உள்ள நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதில், திரளான பக்தர்கள் பங்கேகற்று சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருக்கருணை கிராமத்தில் நடுபழனி என்றழைக்கப்படும் பாலதண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், 12 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி கடந்த 13ம் தேதி காலை 9 மணிக்கு மலை மீது கோயில் வளாகத்தில் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நடைபெற்றன.இந்நிலையில், நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு காலை 9 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர், யாகசாலையில் இருந்து புனிதநீர் கும்பங்கள் புறப்பட்டு மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் சன்னதி கோபுரம், மரகத தண்டாயுதபாணி மூலவர் கோபுரம் ஆகியவற்றுக்கு மைசூர் அவதூத இளைய பீடாதிபதி பூஜ்ஜிய தத்த விஜய் ஆனந்த தீர்த்த சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்….
The post பெருக்கரணை கிராமத்தில் தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.