×

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த அதிமுக வார்டு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு

சென்னை: கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த அதிமுக வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேரை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சி கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கடலூர் மேற்கு மாவட்டம், அதிமுகவை சேர்ந்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினால் எஸ்.வெங்கடேசன் (கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு 1வது வார்டு உறுப்பினர்), எஸ்.பழனிவேல் (4வது வார்டு உறுப்பினர்), எஸ்.ரபேக்கா 10வது வார்டு உறுப்பினர்), எஸ்.சரவணன் (கோட்டகம், கம்மாபுரம் வடக்கு ஒன்றியம்), என்.செல்வராணி (11வது வார்டு உறுப்பினர்), என்.ராஜ்குமார் (பழைய நெய்வேலி, கம்மாபுரம் வடக்கு ஒன்றியம்), என்.ராஜேஷ் (நெய்வேலி தெற்கு கிளை செயலாளர், கம்மாபுரம் வடக்கு ஒன்றியம்) ஆகியோர், இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்….

The post நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த அதிமுக வார்டு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,OPS ,EPS ,Chennai ,ADMK ,Kammapuram panchayat ,Cuddalore ,Dinakaran ,
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...