×

மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான் டேவிட்டை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான் டேவிட்டை முன் கூட்டியே விடுதலை செய்ய  கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன்நாவரசு கடந்த 1996-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழத்தில் படித்த போது அவரை அதே கல்லூரில் படித்த சீனியர் மாணவன் ஜான் டேவிட் ராக்கிங் செய்து கொலை செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜான் டேவிட்க்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து ஜான் டேவிட் தக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என ஜான் டேவிட்டை விடுதலை செய்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழங்கி விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து ஜான் டேவிட் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது தாயார் எஸ்தர் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் தமிழக அரசு அந்த கோரிக்கையை நிராகரித்தது. இந்த நிராகரிப்பு உத்தரவை எதிர்த்து அவரது தாயார் எஸ்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள்  பி.என்.பிரகாஷ், நீதிபதிகள் நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜான் டேவிட்டிற்கு சிறைத்துறை நிர்வாகம் நற்சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் மேலும் கொடூர குற்றங்களில் அதாவது தருமபுரி பஸ் எரிப்பு வழக்குகளில் கூட குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்ஜான் டேவிட்டிற்கு மட்டும் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது எனவும் வாதிட்டார். எனவே அந்த அரசு உத்தரவை ரத்து செய்து அவரை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அப்போது ஆஜரான அரசுத்தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முன் கூட்டியே விடுதலை என்பதை உரிமையாக கூற முடியாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், மற்றவர்களை விடுதலை செய்துள்ளதால் அதே வாய்ப்பை தனக்கு வழங்க வேண்டும் என்று ஒரு சம உரிமையை அவர் கோரா முடியாது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசின் உத்தரவில் தலையிடமுடியாது என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். …

The post மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான் டேவிட்டை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : John David ,Navarasu ,Chennai ICourt ,Dinakaraan ,
× RELATED நீதிமன்றங்களில் 2, 329 பணியிடம் : மே 27 வரை விண்ணப்பம்