×

பள்ளிகொண்டா அருகே இன்று லாரி கவிழ்ந்ததில் டிரைவர் படுகாயம்

பள்ளிகொண்டா: திருச்சி மாவட்டம் முசிறி பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன்(48), லாரி டிரைவர். இவர் சென்னையிலிருந்து பெங்களூரு சோலார்பிளான்ட் கம்பெனிக்கு கன்டெய்னர் லாரியில் உதிரிபாகங்களை ஏற்றிகொண்டு நேற்றிரவு புறப்பட்டார். இன்று காலை 8 மணிக்கு வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நெடுஞ்சாலையோரம் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது. இதில் கன்டெய்னர் லாரி இடதுபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முன்புற கண்ணாடி முழுவதும் சேதமடைந்து டிரைவர் உள்ளே சிக்கி தலை, கை, கால்களில் படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிய டிரைவரை மீட்டு பொய்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த விரிஞ்சிபுரம் போலீசார் பள்ளத்தில் கவிழ்ந்த கன்டெய்னரை கிரேன் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். டிரைவரின் தூக்க கலக்கத்தால் விபத்து நடந்திருக்கலாம் எனவும், கன்டெய்னர் லாரி கவிழ்ந்த பள்ளத்தின் அருகே உயரழுத்த மின் கம்பி கைக்கெட்டும் தூரத்தில் சென்றது. அந்த கம்பி லாரியில் பட்டிருந்தால் பெரும் விபத்து நடந்திருக்கும். நூலிழையில் விபத்து தவிர்க்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்….

The post பள்ளிகொண்டா அருகே இன்று லாரி கவிழ்ந்ததில் டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Pallikonda ,Mayakrishnan ,Musiri Perumalpalayam, Trichy district ,Chennai ,Bengaluru Solar Plant Company ,Dinakaran ,
× RELATED கத்தியை காட்டி வழிப்பறி பாஜ நிர்வாகி...