×

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்  விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, சின்ன காஞ்சிபுரம் உப்புக்குளம் ரெட்டி பேட்டை சேர்ந்தவர் பாரத லட்சுமி (65). இவர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத நபர்கள் பாரத லட்சுமியின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் 15 சவரன்  நகைகளை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் காரில் தப்பிசென்றுவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகர், உத்தரவிட்டதின் பேரில், காஞ்சிபுரம் டி. எஸ்.பி. ஜூலியஸ் சீசர் மேற்பார்வையில், சுங்குவார்சத்திரம் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், எஸ். ஐ. செந்தில்குமார் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு சுங்குவார்சத்திரம் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கர்நாடக மாநிலம் போஸ்டர் சிட்டி உசைனி காலனியை நேர்ந்த தக்கிஅலி (38), அஸ்ரதுல்லா காண்பி (32), சையது அப்பாஸ் ( 22 ) ஆகிய 3 பேரும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து குற்றச் சம்பவத்தில் பயன்படுத்திய கார் மற்றும் 15 சவரனை மீட்டு ஒப்படைத்துள்ளனர். …

The post வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Bharata Lakshmi ,Kanchipuram Salukkulam Reddy Hood ,Kanchipuram Vishnukanji Guaranji ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...