×

கார் மீது லாரி மோதி சிறுவன் பலி: 5 பேர் படுகாயம்

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் அருகே மாங்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ரத்னகுமார் (52) இவரது மனைவி பாரதி (40). இவர்களது உறவினர்கள் மதுரையை சேர்ந்த அமளிகேத்தரின் (52), வேலூரை அடுத்த கணியம்பாடி ஜாய் இம்மானுவேல் (20), ஏஞ்சல் (10), ஜாய் செல்வா (12). வேலூரில் உள்ள சுரேஷ் ரத்னகுமாரின் உறவினருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வந்தது. இதையடுத்து சுரேஷ் ரத்னகுமார் குடும்பத்தினர் மற்றும் மேற்கண்ட உறவினர்கள், நேற்று வேலூருக்கு காரில் புறப்பட்டனர்.சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை கூட்டுச்சாலையில் போக்குவரத்து நெரிசலில் கார் நின்றது. அந்த நேரத்தில் பின்னால் வந்த டிப்பர் லாரி, கார் மீது மோதியது. இதில் கார் கவிழ்ந்து அதில் இருந்த சிறுவன் ஜாய்செல்வா சம்பவ  இடத்திலேயே இறந்தான். மற்ற 5 பேர் காயமடைந்தனர். இதை பார்த்ததும், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிவிட்டார்.தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காகவும், சிறுவன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்….

The post கார் மீது லாரி மோதி சிறுவன் பலி: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Suresh Ratnakumar ,Mangadu ,Bharti ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்