×

பைக் மீது கார் மோதியதில் வாலிபர் பலி

திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம், சேந்தமங்கலம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை மகன் அல்போன்ஸ் (34). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அல்போன்ஸ் வேலை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த தொடுகாடு சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் பழங்கரமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதை கண்ட கார் டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார். இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அல்போன்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்….

The post பைக் மீது கார் மோதியதில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Valier ,Thiruvallur ,Durai son ,Alfonse ,Perumal Temple Street, Kanchipuram District, Chendamangalam ,Sriperudur ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்