×

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை கடிதத்தில் பேராசிரியர் மீது பகீர் புகார்

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி மேலரதவீதியை சேர்ந்தவர் கணேசன் மகள் இந்து பிரியா(18). புளியங்குடியில் உள்ள மனோ உறுப்பு கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு செல்போன் ெகாண்டு செல்லாத நிலையில், செல்போன் கொண்டு சென்றதாக கூறி மாணவிக்கு கல்லூரி பேராசிரியர் மற்றும் பெண் உள்பட 2 பேர் டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவியிடம் மன்னிப்பு கடிதம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பலர் முன்னிலையில் மாணவியை ‘மேனர்ஸ் இல்லாத பெண்’ என பேராசிரியையும், பேராசிரியரும் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி இந்து பிரியா, இன்று (சனி) காலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து புளியங்குடி போலீசார், சம்பவ இடம் சென்று மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மாணவி வீட்டில் நடத்திய ேசாதனையில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் மாணவி எழுதியிருப்பதாவது: ‘‘நான் தற்கொலை செய்வதற்கு பி.காம் துறையில் பணியாற்றும் ஒரு பேராசிரியரும், பேராசிரியையும் தான் காரணம். (அவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்) நான் கல்லூரிக்கு செல்போன் கொண்டு போகவில்லை. ஆனால் நான் கொண்டு வந்ததாகக் கூறி மன்னிப்பு கடிதம் எழுதக் கூறினர். அனைவரின் முன்னிலையில் இருவரும் என்னை ‘மேனர்ஸ் இல்லாத பெண்’ என்று திட்டினர். அந்தப் பேராசிரியர் சில பெண்களுக்கு தப்பான மெசேஜ் அனுப்பியுள்ளார். தயவுசெய்து கெஞ்சி கேட்கிறேன். அந்த பேராசிரியர் கல்லூரியை விட்டு போகணும். நான் செத்து போறதுக்கு சார் தான் காரணம். இது எல்லாருக்கும் தெரியனும். அந்த பேராசிரியர் கல்லூரியை விட்டு போகணும். நான் தான் இந்த லட்டரை எழுதினேன். ப்ளீஸ் நீதி கிடைக்கணும். இப்படிக்கு, உங்களின் அன்பானவள், இந்து பிரியா என்று எழுதியுள்ளார். இந்த கடிதம் குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை கடிதத்தில் பேராசிரியர் மீது பகீர் புகார் appeared first on Dinakaran.

Tags : Bagheer ,Tenkasi ,Ganesan ,Indu Priya ,Puliangudi Chintamani Melarathavidi ,Tenkasi district ,Puliangudi ,Dinakaran ,
× RELATED மின்னல் தாக்கி மாணவர் பலி