×

ஐ.டி மேலாளர் வீடு, மார்க்கெட் பகுதியில் 3 கடைகளை உடைத்து 30 சவரன், பணம், மளிகை பொருட்கள் கொள்ளை

ஆவடி: அம்பத்தூர், சித்து ஒரகடம், கே.வி.கே.சாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மகேஷ் (42). இவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா(36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி சுதா, இரு மகன்களுடன் அதே பகுதியில் வசிக்கும் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.  நேற்று முன்தினம் இரவு மகேஷ் வீட்டை பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளை பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர், அவர் மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த மகேஷ், மனைவி சுதாவுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார். பின்னர், தம்பதியினர் வீட்டிலுள்ள பீரோவை சோதனை செய்தனர். அப்போது, அதிலிருந்த 30 சவரன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து புகாரின்படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டு கதவு, பீரோ ஆகியவற்றில் பதிவான கைரேகைகளை பதிவு செய்யப்பட்டன.  இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.திருவள்ளூர்: திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாஜக செயற்குழு உறுப்பினர் தா.பாலாஜி என்பவரின் பால் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.23 ஆயிரம் ரொக்கம், ரூ.3 ஆயிரம் மதிப்பிலான ஐஸ்கிரீம்களையும், இதேபோல் அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவரது மளிகைக் கடையில் ரூ.19 ஆயிரம் ரொக்கம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களையும் மற்றும் சரவணா ஸ்டோர் என்கிற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 3 கடைகளின் பூட்டை உடைத்து சுமார் ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் நகர போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது….

The post ஐ.டி மேலாளர் வீடு, மார்க்கெட் பகுதியில் 3 கடைகளை உடைத்து 30 சவரன், பணம், மளிகை பொருட்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Avadi ,Mahesh ,KVK Swamy Street, ,Sidhu Oragadam, Ampathur ,Ramapuram, Chennai ,
× RELATED ஆவடி சித்த மருத்துவர் மற்றும் அவரது...