×

மோகன்லால் இயக்கும் படத்துக்கு வெளிநாடுகளில் இசைப் பணி

சென்னை: மோகன்லால் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அவரது இயக்கத்தில் உருவாகி வரும் பேன்டஸி கதை படம் ‘பரோஸ்’. 2 வருடங்களுக்கு முன்பே இந்த படம் உருவாக தொடங்கியது. கொரோனா காலகட்டத்தால் படம் நின்றது. இதையடுத்து பிற படங்களில் நடிப்பதில் மோகன்லால் பிசியாக இருந்தார். அதனாலும் இதன் படப்பிடிப்பு தடைபட்டது. இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை மோகன்லால் முடிக்க உள்ளார். இந்த படத்தில் மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கின்றனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.

குழந்தைகளை கவரும் விதமாக உருவாகும் இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகும் படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது. ஜிஜோ புன்னூஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆப் டி’காமா’ஸ் ட்ரெஷர்’ என்ற நாவலை மையமாகக் கொண்டு படம் உருவாகிறது. வாஸ்கோட காமா இந்தியா வந்தபோது, அவரிடம் இருந்த பொன்னும் பொருளையும் பாதுகாத்தவர் பரோஸ்.

அவரது கதையாகத்தான் இந்த படம் உருவாகிறது. இதில் வாஸ்கோடகாமா கேரக்டரில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிப்பதாக தெரிகிறது. படத்தின் பின்னணி இசையை லிடியன் நாதஸ்வரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கம்போஸ் செய்து வருகிறார். அடுத்தகட்ட இசை கோர்ப்பு பணிகள் ஹங்கேரியிலும் பிறகு பிரான்சிலும் நடைபெற உள்ளது.

The post மோகன்லால் இயக்கும் படத்துக்கு வெளிநாடுகளில் இசைப் பணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mohanlal ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில்,...