×

செங்கல்பட்டில் பைக் மீது லாரி மோதி மாநகர போக்குவரத்து கழக கண்டக்டர்கள் 2 பேர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இன்று அதிகாலை வேலைக்கு பைக்கில் சென்ற மாநகர போக்குவரத்து கழக 2 கண்டக்டர்கள்மீது லாரி மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா, தச்சூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் (55). இவர், சென்னை ஆலந்தூர் மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் திருக்கழுக்குன்றம், புல்லேரிமேடு பகுதியை சேர்ந்த ஜோதிபிரகாஷ் (45). இவர், சென்னை பல்லவன் போக்குவரத்து பணிமனையில் நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று அதிகாலை வேலைக்கு செல்ல ஒரே பைக்கில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர். ராட்டினங்கிணறு ரயில்வே மேம்பாலத்தை இருவரும் பைக்கில் கடந்தபோது, பின்னால் ஒரு டாரஸ் லாரி வேகமாக வந்து மோதியது. இதில் நந்தகோபால், ஜோதிபிரகாஷ் ஆகிய இருவரும் பைக்குடன் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்தனர். நந்தகோபால், ஜோதிபிரகாஷ் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல் என்பவரை கைது செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், சோத்துப்பாக்கத்தில் இருந்து எம்சாண்ட் மணல் ஏற்றிவந்து பட்டரைவாக்கத்தில் இறக்கிவிட்டு திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்….

The post செங்கல்பட்டில் பைக் மீது லாரி மோதி மாநகர போக்குவரத்து கழக கண்டக்டர்கள் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chengalpat ,City Transport Corporation ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் மதுபோதையில் முதியவரை தாக்கிய 4 பேர் கைது