- சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
- நாகை
- சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
- Panangudi
- நாகை மாவட்டம்
- தின மலர்
நாகை: நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் கிளை நிறுவனம் கடந்த ஒரு வருடமாக மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு அதிரடியாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. நாகூர் பண்டக சாலை தெருவில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். செயல்பட்டு வருகிறது. இங்கு ஆலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த ஒரு வருடமாக சி.பி.சி.எல். நிறுவனம் மின் கட்டணம் செலுத்தவில்லை. இது தொடர்பாக நாகை மாவட்ட மின் வாரியம் பலமுறை எச்சரிக்கை அறிவிப்புகள் கொடுத்தும் சி.பி.சி.எல். நிறுவனம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து நாகூர் மின்வாரியத்துறை ஊழியர்கள் சி.பி.சி.எல். நிறுவனத்தின் மின் இணைப்பை இன்று அதிரடியாக துண்டித்தனர். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கிளை அலுவலகம் பூட்டியே கிடந்ததால் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்திருப்பதாக மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
The post சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் கிளை நிறுவனம் மின் பாக்கி!: மின் இணைப்பை துண்டித்து மின்துறை அதிகாரிகள் அதிரடி..!! appeared first on Dinakaran.