×

பள்ளி மாணவி கர்ப்பம் உறவினருக்கு வலைவீச்சு

திருவள்ளூர்: காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி வில்லிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறாள். மாணவியை அவளது உறவினர் சுரேஷ் என்பவர் நாள்தோறும் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு விடுவதும் பின்னர் மீண்டும் அழைத்து வருவதுமாக இருந்துள்ளார். இந்நிலையில், மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளனர். அதில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது உறவினர் சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷை ேதடுகின்றனர்.பூந்தமல்லி: மாங்காட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை மாங்காடு கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த முத்துவேல்(45) என்பவர் ஆசைவார்த்தை கூறியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய்  பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில் மாங்காடு பகுதியில் பஞ்சர் கடை நடத்தும் முத்துவேல் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறியும், மிரட்டியும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும் காட்டுப்பாக்கத்தில் இதற்காகவே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சிறுமியை அங்கு பலமுறை பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, முத்துவேலை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்….

The post பள்ளி மாணவி கர்ப்பம் உறவினருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Anjaneyapuram ,Kakkalur ,Villivakam.… ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்