×

மாமல்லபுர சிற்பங்களை பெண்கள் இன்று கட்டணமில்லாமல் ரசிக்கலாம்

சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை நுழைவு கட்டணமின்றி இன்று மட்டும் இலவசமாக பெண்கள் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று (8ம் தேதி) ஒரு நாள் மட்டும் நுழைவுக்கட்டணம் இன்றி பெண்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு ஒரு நபருக்கு ₹ 40, வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ₹ 600 கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது….

The post மாமல்லபுர சிற்பங்களை பெண்கள் இன்று கட்டணமில்லாமல் ரசிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Mamallapura ,Chennai ,International Women's Day ,Mamallapuram ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...