உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற தனிப்பிரிவு போலீசார், ஏ.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முத்துக்கல்யாணி வீட்டில் சோதனை செய்தனர். இதில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் முத்துக்கல்யாணி, ஈச்சம்பட்டியைச் சேர்ந்த குணபாண்டி ஆகியோரை கைது செய்து உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உசிலம்பட்டி தாலுகா போலீசார் முத்துக்கல்யாணி, குணபாண்டி மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….
The post உசிலம்பட்டி அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு பேர் கைது appeared first on Dinakaran.