×

வடசென்னை பகுதியில் போதை மாத்திரை விற்றவர் கைது

தண்டையார்பேட்டை: வடசென்னை பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்கப்படுவதாக, வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் மேற்கண்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 500 போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அந்த வீட்டில் வசிக்கும் ரமேஷ் என்பவர், அதே பகுதி நேதாஜி நகர் 4வது தெருவை சேர்ந்த ஜாபர் சாதிக் (26) என்பவரிடம் போதை மாத்திரைகளை வாங்கி, வடசென்னை பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். இதையடுத்து, ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகளை கடத்திவந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள ரமேஷை தேடி வருகின்றனர்….

The post வடசென்னை பகுதியில் போதை மாத்திரை விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vadasennai ,Kandadarpet ,North ,Co-ordinator ,Ramya Bharadi ,Vadashennai ,Dinakaran ,
× RELATED பெண்கள், சிவப்பு வண்ண உதட்டுச்சாயம்...