×

மதுரையில் தச்சுத் தொழிலாளி ஈஸ்வரன் மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: மதுரையில் தச்சுத் தொழிலாளி ஈஸ்வரன் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. காவல்துறை விசாரணையால் ஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் தொர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை பீபீ குளத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் காவல் துறையின் விசாரணையால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் வழக்கின் நிலை அறிக்கையைத் தாக்கல்செய்ய மதுரை மாநகர காவல் ஆணையர், தல்லாகுளம் காவல் ஆய்வாளருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த பிப்.14-ம் தேதி உத்தரவிட்டது. மதுரை மாவட்டம் பீபீ குளத்தைச் சேர்ந்த ரெங்கம்மாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தவறான புகாரின் அடிப்படையில், தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரணை எனக்கூறி எனது மகனை அழைத்துச் சென்று துன்புறுத்தியதால், தற்கொலை செய்துகொண்டார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரித்தால் வழக்கின் உண்மை நிலை தெரியவராது. ஆகவே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை நீதிபதி இளந்திரையன், வழக்கு குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர், தல்லாகுளம் காவல் ஆய்வாளர் ஆகியோர் நிலை அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டும் என ஆணையிட்டிருந்தார். இந்நிலையில் இன்று விசாரித்த நீதிபதி அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். …

The post மதுரையில் தச்சுத் தொழிலாளி ஈஸ்வரன் மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Carpentorman Eswaran ,Maduram ,High Court ,Maduraikil ,CPCID ,Madurai ,High Court Branch ,Eswaran ,Mathuril Carpenter Eswaran ,High Court of Mathurika ,Dinakaran ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...