பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் காஞ்சனா சுதாகரை வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது. அவரை எதிர்த்து பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ரவிக்குமார் மனைவி மாலதி ரவிக்குமார் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கீதா மேகநாதன், தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்தார். பூந்தமல்லி நகராட்சி தேர்தலில் இதனால் மும்முனைப் போட்டி நிலவியது. இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் வாக்குப்பதிவு செய்தனர். 2 கவுன்சிலர்கள், தங்களது வாக்குப்பதிவு செய்தனர். அப்போது திமுக கவுன்சிலர் ஸ்ரீதர் தேர்தலில் முறைகேடு நடப்பதாகக்கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், தேர்தல் அதிகாரி நாராயணன் தேர்தலை நிறுத்திவைப்பதாக அறிவித்தார். தேர்தல் நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மறுதேதி குறிப்பிடாமல் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தார். …
The post பூந்தமல்லி நகராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.