சென்னை: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஆதாய கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெரம்பூர், மதுரைசாமி மடம் கிழக்கு தெருவில் உள்ள வீட்டில் தனியாக இருந்த துர்காதேவி (52) என்பவர், கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து திரு.வி.க.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், ஓட்டேரி எஸ்.எஸ்.புரம், ஏ-பிளாக் பகுதியை கார்த்திக் (24) மற்றும் கார்த்தி (எ) கிருஷ்ணாயில் கார்த்தி (23) ஆகிய இருவர், நகைக்காக துர்காதேவியை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து, ஆதாய கொலை பிரிவில் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் இருவர் மீதும் ஆதாரப்பூர்வமாக குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது….
The post பெண்ணை ஆதாய கொலை செய்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.