×

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேர் சிறைபிடிப்பு: கிளிநொச்சி சிறையில் அடைப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இரவில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் படகுகளை வழிமறித்து, மீனவர்களை எச்சரித்து மிரட்டினர். எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டி, தங்கச்சிமடம் மீனவர்கள் 8 பேரையும் படகுடன் சிறை பிடித்து, தலைமன்னார் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள், அச்சமடைந்து உடனடியாக வேறு பகுதிகளுக்கு தங்களது படகுகளை ஓட்டிச் சென்றனர். இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் இரவில் மீன்பிடித்து நேற்று காலை கரை திரும்பிய படகுகளில் மீன்களின் அளவு மிகவும் குறைவாக இருந்தது. இதனிடையே தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட தங்கச்சிமடத்ைத சேர்ந்த மீனவர்கள் ரமேஷ் (40), ரோடிக் (18), அஜித் (25), கொலம்பஸ் (52), இமான் (22), வின்சன் (23), பவுத்தி (19) மற்றும் இஸ்ரேல் (20) ஆகியோரிடம் கடற்படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இலங்கை கடல்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் 8 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். 8 மீனவர்களும் நேற்று மாலை கிளிநெச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி சிவபாத சுந்தரம் விசாரணை செய்து, மீனவர்களை மார்ச் 11ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் கிளிநொச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்….

The post இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேர் சிறைபிடிப்பு: கிளிநொச்சி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Rameswaram ,Kilinochchi Jail ,Pak Strait ,Sri Lankan Navy ,
× RELATED ராமேஸ்வரத்தில் சாலையில் நின்று...