×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,499 பேருக்கு கொரோனா; 255 பேர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 23,598 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 11,499 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,05,844-ஆக உயர்ந்தது.* புதிதாக 255 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,13,481 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 23,598 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,22,70,482 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.52% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.28 % ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,21,881 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.*இந்தியாவில் 1,77,17,68,379 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 28,29,582 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

The post இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,499 பேருக்கு கொரோனா; 255 பேர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 23,598 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Corona ,India ,Delhi ,Dinakaran ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...