×

பள்ளி நேரத்தில் பஸ் இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

சத்தியமங்கலம்:  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள புதுப்பீர்கடவு, பட்டரமங்கலம் ஆகிய இரு கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ராஜன் நகர் கஸ்தூரிபா அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்கு கல்வி பயில அரசு பஸ்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த இரு கிராமங்கள் வழியாக பள்ளி நேரத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சரிவர இயக்கப்படாததால்  இந்த இரு கிராமங்களை சேர்ந்த  மாணவர்கள் 3 கி.மீ தூரம் நடக்க வேண்டிய நிலை உள்ளது. நேற்று பட்டரமங்கலத்தைச் சேர்ந்த பிரபு என்பவரின் மகன் பிரித்திவிராஜ் (13) பள்ளி செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி பவானிசாகர் பஸ் நிலையத்தில் இறங்கி தொட்டம்பாளையம் அரசு பள்ளி செல்வதற்காக மற்றொரு அரசு பஸ்சில் ஏறியபோது  ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக்கிய தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக படியிலிருந்து தவறி விழுந்த பிரித்திவிராஜுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த புதுப்பீர்கடவு மற்றும் பட்டரமங்கலம் கிராமப்பகுதி மக்கள்  பள்ளி நேரத்திற்கு இயக்கப்படாமல் உள்ள பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், மாணவர்கள் பஸ்சில் ஏறும்போது  ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் சரிவர கவனித்து பணியாற்ற கோரி புதுப்பீர்கடவு பிரிவில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பவானிசாகர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாணவன் பஸ்சிலிருந்து கீழே விழுந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். …

The post பள்ளி நேரத்தில் பஸ் இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Satyamangalam ,Neupayegadavu ,Battaramangalam ,Bavanisagar, Erode district ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு