×

2 பெண் ஐஜிக்கள் உட்பட 4 பேர் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: 2 பெண் ஐஜிக்கள் மற்றும் 2 எஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:சென்னை அமலாக்கப்பிரிவில் ஐஜியாக இருந்த விஜயகுமாரி ஆவடி மாநகர தலைமையிடம் மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும், சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த காமினி தாம்பரம் மாநகர தலைமையிடம் மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும், தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் சென்னை, சிபிசிஐடி கண்காணிப்பாளராகவும், சென்னை மாநகர தலைமையிட துணை கமிஷனராக இருந்த பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது….

The post 2 பெண் ஐஜிக்கள் உட்பட 4 பேர் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Home Secretary ,Prabhakar ,Chennai ,Dinakaran ,
× RELATED “மீண்டும் மோடி வென்றால் நாடே...