×

திருநின்றவூர் நகராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெற்றி

திருநின்றவூர்: ஒரே குடும்பத்தில் 3 பேர் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். திருநின்றவூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 15 வார்டுகளில் வெற்றி வாகை சூடியது. இங்கு, திமுக நகர செயலாளரர் தி.வை.ரவி. இவர், 14-வார்டு திமுக சார்பில்  போட்டியிட்டு 924 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரது மனைவி உஷாராணி ரவி, 1-வது வார்டில் போட்டியிட்டு 506 வாக்குகள் பெற்றும், ரவியின் தம்பி தி.வை.சுரேஷ்குமார், 25வது வார்டில் போட்டியிட்டு 649வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர். நடைபெற்ற தேர்தலில் ஒரே குடும்பத்தில் திமுகவை சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.   …

The post திருநின்றவூர் நகராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெற்றி appeared first on Dinakaran.

Tags : of ,Thirunanavur ,Thirunanthavur ,Thirunandavur ,Thirunavur ,
× RELATED சீர்காழியில் ஆண்டு பெருவிழாவையொட்டி...