×

ரஷ்யாவின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு பதிலடி!: 5 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தகவல்..!!

உக்ரைன்: உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா ஆக்ரோஷ தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்று உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் நகரில் 5 போர் விமானங்களுடன், ரஷ்யாவின் ஒரு ஹெலிகாப்டரையும் சுட்டு  வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருக்கிறது. விமான நிலையங்கள் மற்றும் ராணுவ நிலையங்களை குறிவைத்து ரஷ்யா தாக்கும் நிலையில், உக்ரைன் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து குண்டுமழை பொழிந்து வருவதால், ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைன் மீது குண்டுகளை வீசி போர் தொடுத்துள்ள ரஷ்யா, சைபர் தாக்குதலிலும் ஈடுபடுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ராணுவம் தனது வேலைகளை செய்து வருவதால் நாட்டு மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அதிபர் அறிவுறுத்தியுள்ளார். உக்ரைனுக்கு பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. உக்ரைன் – ரஷ்யா இடையேயான தற்போதைய சூழல் மிகப்பெரிய சிக்கலுக்கு வித்திடும் என ஐ.நா.வில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. …

The post ரஷ்யாவின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு பதிலடி!: 5 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Ukraine army ,Ukraine ,Russia ,Dinakaran ,
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்