- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022
- திமுக
- தனசேகரன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- உள்ளூர் அமைப்பு
- வார்டு
- சென்னை கார்ப்பரேஷன்
- ஊர் உள்ளூராட்சி தேர்தல் 2022
- தனசேகரன்
- தின மலர்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தனசேகரன் என்பவர் வெற்றிபெற்றுள்ளார். சென்னை மாநகராட்சி 137வது வார்டில் திமுக வேட்பாளர் தனசேகரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் தனசேகரன் 10,578 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதி 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சி ஆகிய அனைத்து பகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. அதேபோல், நகராட்சி, பேரூராட்சி வார்டுகளையும் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றது. சொல்லி அடித்தபடி சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், மேயர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளது. …
The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தனசேகரன் வெற்றி..!! appeared first on Dinakaran.