×

அரியலூர் மாணவி தற்கொலை: பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

அரியலூர்: அரியலூர் மாணவி தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து அவரது பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில்  12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து  திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து, விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். அவர், ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையே பள்ளி நிர்வாகிகள் மதம் மாற வற்புறுத்தியதால்தான், தன் மகள் தற்கொலை செய்ததாக மாணவியின் தந்தை மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு, மாணவி தற்கொலை வழக்கை, சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், மாணவி தற்கொலை விவகாரத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்கு தூண்டுதல் உள்பட நான்கு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிபிஐ இணை இயக்குனர் வித்யா குல்கர்னி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம், மாணவி படித்த மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி மற்றும் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.இதைத்தொடர்ந்து டிஎஸ்பிக்கள் ரவி, சந்தோஷ், இன்ஸ்பெக்டர் சுமதி உள்ளிட்டோர் கொண்ட 6 பேர் குழுவினர், நேற்று காலை 10 மணியளவில், வடுகபாளையம் கிராமத்துக்கு வந்தனர். அங்கு மாணவியின் தந்தை மற்றும் சித்தியிடம் சுமார் 2 மணி நேரம் விசாரித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்….

The post அரியலூர் மாணவி தற்கொலை: பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,CBI ,Tirukkatupalli, Thanjavur district ,
× RELATED அரியலூர் அரசு ஐடிஐல் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு