×

இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.10கோடி போதைப்பொருள் பறிமுதல்: தூத்துக்குடி அருகே 8 பேர் கைது

தூத்துக்குடி:  தூத்துக்குடி அருகே வேம்பார் கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிரிவு போலீசார் வேம்பார் கடற்கரை பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.அப்போது கடற்கரையிலிருந்து ஒரு நாட்டு படகு கடலுக்குள் சென்றது. இதனை கியூ பிரிவு போலீசார் நடுக்கடலில் தடுத்து நிறுத்தி மடக்கி சோதனையிட்டனர். அப்போது கற்கண்டு போன்ற ஒரு பொருள், 5 பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். அதனை போலீசார் ஆய்வு செய்ததில் அது ஐஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் என தெரியவந்தது. 10 கிலோ போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர். இதன் இந்திய மதிப்பு ரூ.10 கோடி. சர்வதேச மதிப்பு சுமார் ரூ.25 கோடி என்று கூறப்படுகிறது.விசாரணையில் படகில் இருந்த 7 பேர் விளாத்திகுளம் அருகே கீழவைப்பாறைச் சேர்ந்த சிலுவை (44), வினிஸ்டன் (24), கபிலன் (22), சுபாஷ் (26),  அஸ்வின் (26), கிங்பன் (25), சிப்பிகுளம் சைமன் (30) ஆகிய 7 பேர் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட இருதயவாஸ் என்பவரை தூத்துக்குடியில் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் இலங்கைக்கு படகு மூலம் போதைப்பொருளை கடத்த முயன்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை தூத்துக்குடி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்….

The post இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.10கோடி போதைப்பொருள் பறிமுதல்: தூத்துக்குடி அருகே 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Thoothukudi ,Q Division ,Vembar ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...