×

கீழடி அருகே அகரத்தில் அகழாய்வு பணிக்காக நில அளவீடு மும்முரம்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளன. இதன் அருகே அகரத்தில் 7ம் கட்ட அகழாய்வில் எட்டு குழிகள் தோண்டப்பட்டன. இதில் உறைகிணறுகள், தங்க காதணி, புகைபிடிப்பான், அலங்கார பொம்மை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன. ஏற்கனவே அகழாய்வு நடந்த இடத்தின் அருகே 8ம் கட்ட அகழாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2 நாட்களாக தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள், அகரத்தில் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் பணிகள் முடிக்கப்பட்டு மார்ச் முதல் வாரத்தில் அகரத்தில் அகழாய்வு பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post கீழடி அருகே அகரத்தில் அகழாய்வு பணிக்காக நில அளவீடு மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Agarat ,Geezadi ,Tiruppuvanam ,Tiruppuvanam, Sivagangai district ,Dinakaran ,
× RELATED தாய் பாசத்திற்கு ஈடு இணை ஏது?...