×

தஞ்சையில் வாத்துகுஞ்சுகள் விற்பனை அமோகம்

தஞ்சை : தர்மபுரியில் இருந்து வாத்துக்குஞ்சுகள் கொண்டு வந்து தஞ்சைப்பகுதியில் விற்பனை செய்து வருகிறார் வியாபாரி சித்தப்பன்.விவசாயிகளின் உற்றத் தோழன் என்று வாத்துக்கள் அழைக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் கோழி, ஆடு, மாடு கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் பலரும் வாத்துக்களும் வளர்த்து வருகின்றனர். கிராமப்புறங்களில் கிடைக்கும் வாத்து முட்டைகளுக்கும் நல்ல மவுசு உள்ளது. கிராமப்புறங்களில் கோழி வளர்ப்புக்கு அடுத்தபடியாக, வாத்து வளர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தஞ்சை மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம் என்பதால் ஏராளமான விவசாயிகள் வாத்துக்குஞ்சுகள் வாங்கி அதனை வளர்த்து வயல்வெளிகளில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதற்காக ஆண்டுதோறும் பருவ காலங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து வாத்துக்குஞ்சுகளை தஞ்சைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரிகள் அதிகம் பேர் உள்ளனர். சம்பா, தாளடி அறுவடை பணி நடந்து வருவதால் இந்த நேரத்தில் வாத்துக்களை விட்டால் பயிர் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்கள் நன்றாக வளரும்.இதற்காக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் தஞ்சையில் முகாமிட்டு வாத்து குஞ்சுகள் விற்பனை செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் காளேக்கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த சித்தப்பன் (52) என்பவர் வாத்துக்குஞ்சுகனை கொண்டு வந்து தஞ்சை பகுதியில் விற்பனை செய்து வருகிறார்.இதுகுறித்து அவர் கூறுகையில், வாத்துக்குஞ்சுகள் ஒரு ஜோடி ரூ.120க்கு விற்கப்படுகிறது. தர்மபுரியில் இருந்து வாத்து குஞ்சுகளை லாரியில் தஞ்சைக்கு கொண்டு வருகிறோம். பின்னர் வாத்து குஞ்சுகளை கால்நடையாக மேய்த்து கொண்டு சந்தைகள், கிராமப்புறங்களில் விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். இந்த வாத்துக்குஞ்சுகளை விவசாயிகள் வாங்கி வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.3 மாதத்தில் குஞ்சுகள் பெரிதாக வளர்ந்து விடும். 6 மாதத்துக்கு பிறகு முட்டை இட தொடங்கி விடும். தோட்டங்கள் உட்பட பல இடங்களிலும் வாத்துகளை வளர்க்கலாம். வயல்வெளிகளில் கிடைக்கும் புழுக்களை உட்கொண்டு, பயிர்கள் நன்றாக வளர இவை உதவுவதால், பலரும் விலைக்கு வாங்கிச்செல்கின்றனர். இதற்காக தனி இட வசதி தேவை என்பதில்லை என்று கூறினார்….

The post தஞ்சையில் வாத்துகுஞ்சுகள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Thanju ,Amokam ,Thanjai ,Siddappan ,Darmapuri ,Thanjabudhi ,
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...