×

அச்சிறுப்பாக்கம் அருகே மணல் திருட்டை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே ஓடையில் மணல் திருட்டை தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் எடையாளம் கிராமத்தில் மழைவெள்ளம் செல்லும் நீரோடை உள்ளது. மழைக்காலத்தின்போது இந்த ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது அந்த பகுதியில் அதிகளவு மணல் தேங்கிவிடும். இவ்வாறு தேங்கி நிற்கும் மணலை அப்பகுதியினர் வீடு கட்டுவதற்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில், ஒருசிலர் ஓடையை ஆக்கிரமித்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணலை கடத்திச் செல்வதாக தெரிகிறது. மேலும் ஓடையின் அருகில் உள்ள வயல்வெளிப் பகுதிகளில் மணலை குவியல், குவியலாக சேர்த்துவைத்து விற்பனை செய்வதாக தெரிகிறது. அரசின் விதிமுறைகளை மீறி மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மணல் திருட்டை தடுக்கவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்….

The post அச்சிறுப்பாக்கம் அருகே மணல் திருட்டை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurangam ,Chengalpaddu District Mathurandakam ,
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...