×

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டோமென தேடினேன்: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ ‘கலகல’

மதுரை:  எந்த சின்னத்தில்  ஓட்டு போட்டோம் என்று பார்க்கும் விவிபேட் இயந்திரத்தை தேடினேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.  மதுரை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தனது மனைவி ஜெயந்தி, மகள் ரம்யா, மருமகன் கணேசன்  ஆகியோருடன் வந்து, மதுரை மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். பின்னர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை குளறுபடி உள்ளது. ஒரு வார்டில் இருந்த வாக்காளர் பெயர் வேறு வார்டில் மாறி உள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்று காட்டும் விவிபேட் இயந்திரம் இந்த முறை வரவில்லை. ஓட்டு போட்டதும் அதை தேடினேன்’’ என்றார். விவிபேட் இயந்திரம் இந்த தேர்தலில் பயன்படுத்தவில்லை என ஏற்கனவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சரே அது தெரியாமல் இருக்கிறாரே என சுற்றியிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் சிரித்தனர்….

The post எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டோமென தேடினேன்: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ ‘கலகல’ appeared first on Dinakaran.

Tags : Former Minister ,Sellur Raju ,Madurai ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…