×

திருவள்ளூர் அருகே ஆசாமி அடித்து கொலை?: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் பட்டரை சந்திப்பு அருகே அதிகத்தூர் செல்லும் சாலையில் உள்ள நகைக்கடை வாசல் அருகே நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து மணவாள நகர் போலீசில் புகார் செய்தனர். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நகை கடை வாசல் அருகே இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்தனரா என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர். …

The post திருவள்ளூர் அருகே ஆசாமி அடித்து கொலை?: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Assami ,Thiruvallur ,Tiruvallur ,Achithur ,Kadambathur Union Pattrai Junction ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...