×

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதை அறிந்து காரணம்தேட எஸ்.பி.வேலுமணி போராட்டம் நடத்தியுள்ளார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தனது வாக்கை பதிவு  செய்வதற்காக சென்னை ஓட்டேரியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு குடும்பத்துடன் வந்தார். ஓட்டு போட்ட பிறகு நிருபர்களை சந்தித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில்,‘‘கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும், மக்கள் நலனுக்காக பல்வேறு சலுகைகளை போராடி பெற்று தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையை சிங்கார சென்னையாக முதலமைச்சர் மாற்றுவார் என மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது. எனவே, சென்னையில் உள்ள 200 வட்டங்களையும் திமுக உறுதியாக கைப்பற்றும். தேர்தல் தோல்வி ஜுரம் வந்துவிட்டால் இதுபோன்று குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவது அதிமுகவின் வாடிக்கை. கொங்கு மண்டலமும் திமுகவின் கோட்டையாக மாறி இருப்பதை இது வெளிக்காட்டுகிறது. தேர்தலுக்கு முன்பே ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வைத்தால் தோல்விக்கு காரணமாக காட்டிவிடலாம் என எஸ்.பி.வேலுமணி போராட்டம் நடத்தியுள்ளார்.  கொரோனா காலம், பொருளாதார நெருக்கடி, மழை வெள்ளம் உள்ளிட்டவற்றை எதிர்கொண்டது, 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது, மக்கள் துயர் அடையும்போது களத்திற்கு ஓடோடி வந்து பணியாற்றுவது உள்ளிட்ட பணிகளை தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார். அவற்றுக்கு அங்கீகாரம் வழங்க திமுகவுக்கு வெற்றி வழங்க மக்கள் தயாராக இருப்பதால் இதுபோன்ற நாடகத்தை எஸ்.பி.வேலுமணி நடத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள 21  மாநகராட்சியையும் திமுக கைப்பற்றும். திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக  உள்ளது. இவ்வாறு  அவர் கூறியுள்ளார்….

The post தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதை அறிந்து காரணம்தேட எஸ்.பி.வேலுமணி போராட்டம் நடத்தியுள்ளார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dedar S.S. GP ,Veleni ,Minister ,B. K.K. SegarBabu ,Perampur ,Tamil Nadu ,Hindu ,P. K.K. Segarbabu ,S.A. GP ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...