×

சாலை தடுப்பில் பைக் மோதியது எஸ்ஐ மகன் பரிதாப சாவு

திருவள்ளூர்: சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி எஸ்ஐ மகன் பரிதாபமாக இறந்தார். திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் காவல் சிறப்பு எஸ்ஐயாக இருப்பவர் சரவணன். இவரது மகன் பாலாஜி (23). நேற்று முன் தினம் இரவு அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பு நோக்கி பாலாஜி பைக்கில் சென்றார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை தடுப்புச்சுவரில் மோதி நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலாஜி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி போலீசாருடன் சென்று பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்….

The post சாலை தடுப்பில் பைக் மோதியது எஸ்ஐ மகன் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Pharataba Sawu ,Thiruvallur ,Pullarambakkam ,Padha Chu ,
× RELATED டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில்...