×

கட்டுக்குள் வந்த கொரோனா பரவல்…மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41.99 கோடி : உலக மக்களிடையே மீளும் நம்பிக்கை

ஜெனீவா : உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41.99 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 99 லட்சத்து 86 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 2 லட்சத்து 68 ஆயிரத்து 933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 34 கோடியே 38 லட்சத்து 37 ஆயிரத்து 571 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 லட்சத்து 80 ஆயிரத்து 463 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 97,797 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2,080 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,707 பேர்கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 496 பேர் மரணமடைந்துள்ளனர்.அதே போல பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 1,29,266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்….

The post கட்டுக்குள் வந்த கொரோனா பரவல்…மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41.99 கோடி : உலக மக்களிடையே மீளும் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Geneva ,Wukan City, China ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...