×

ஓட்டப்பிடாரம் அருகே பஞ்சு லாரியில் திடீர் தீ விபத்து: விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கே.கைலாசபுரத்தில் லாரிக்கு வெல்டிங் வைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஞ்சு  ஏற்றிச் சென்ற லாரி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. கோவையில் இருந்து நாகர்கோவில் உள்ள நிறுவனத்திற்கு நேற்று பஞ்சு மெத்தைக்கு தேவையான பஞ்சினை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கிளம்பியது. லாரியை தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கே.கைலாசபுரத்தினை சேர்ந்த  சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் லாரியில் வெல்டிங் வைக்கும் வேலை இருந்ததால் சுரேஷ் தனது நண்பர் மைக்கல் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் கடைக்கு இன்று காலை சென்று வெல்டிங் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரியில் தீ பற்றியது. தீயானது மளமளவென லாரியில் பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ், காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் லாரி முற்றிலுமாக எரிந்து சேதமானது. விபத்து குறித்து நாரைக்கிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post ஓட்டப்பிடாரம் அருகே பஞ்சு லாரியில் திடீர் தீ விபத்து: விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Punchu ,Odapidaram ,Thoothukudi ,Thoothukudi District ,Othapidaram Fire ,Kailasapuram ,Panchu ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...