×

ஆதனக்கோட்டை பகுதியில் வைக்கோல் கட்டுகள் விற்பனைக்கு தயார்

கந்தர்வகோட்டை : ஆதனக்கோட்டை பகுதியில் வைக்கோல் கட்டுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதிகளில் பெய்த வடகிழக்கு பருவமழையால் சம்பா சாகுபடி அமோகமாக இருந்தது. இந்நிலையில் இயந்திரங்களில் அறுவடை செய்த நெல்மணிகள் போக வைக்கோல் வயல் வெளியில் காயவைத்து, அதனையும் இயந்திரம் மூலம் உருட்டி பந்தாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த வைக்கோல் தற்போது ரூ.150ல் இருந்து தரத்திற்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வைக்கோல் மாட்டு தீவனத்திற்காகவும், எளிதில் உடையக்கூடிய பீங்கான் பொருட்களை பத்திரமாக லாரிகளில் எடுத்து வரவும் பயன்படுத்தப்படுகிறது. இதனை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி லாரி மற்றும் டிராக்டர்களில் ஏற்றிச்செல்கின்றனர். தற்போது கந்தர்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை பகுதியில் அறுவடை செய்த நெல் வயலில் சிதறிக்கிடந்த வைக்கோல் பந்துபோல கட்டாக கட்டி வைக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது….

The post ஆதனக்கோட்டை பகுதியில் வைக்கோல் கட்டுகள் விற்பனைக்கு தயார் appeared first on Dinakaran.

Tags : Adanakottai ,Gandharvakottai ,Puthukottai district ,Dinakaran ,
× RELATED அக்கட்சிபட்டி கிராமத்தில்...