×

கோவை அருகே தாயை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட வாலிபர் கொலை-உறவினர் கைது

பெ.நா.பாளையம் : கோவை அருகே தாயை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட வாலிபரை கொலை செய்த சம்பவத்தில் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.கோவை துடியலூர் அருகே வடமதுரை விருந்தீஸ்வரர் கோயில் வீதியில் உள்ள காலனி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (24). இவர் தன் தாயுடன் வசித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான கோபிநாத் (29) என்பவரும் சிறிது தூரத்தில் இருந்த  காலி இடத்தில் நேற்று முன்தினம் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சிவகுமாரின் தாய் குறித்து கோபிநாத் அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், ‘‘ஏன் எனது தாயை பற்றி கேவலமாக பேசினாய்?’’ என்று தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதை மனதில் வைத்துக் கொண்டு கோபிநாத் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சென்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிவகுமாரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த சிவகுமாரை அவரது தாய் சித்ரா மீட்டு அருகில் உள்ள  மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்ட சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு சிவகுமார்  இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிவகுமாரை கத்தியால் குத்திக்கொலை செய்த கோபிநாத் துடியலூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்….

The post கோவை அருகே தாயை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட வாலிபர் கொலை-உறவினர் கைது appeared first on Dinakaran.

Tags : Cove ,UN Palayam ,Goa. Govai ,Coe ,Dinakaran ,
× RELATED கோவை வேளாண் பல்கலை.யில் 6-வது மலர் கண்காட்சி: துணைவேந்தர் துவக்கி வைத்தார்