- கல்பாக்கம் 2வது அணு உலங்கு மின் நிறுத்தம்
- சென்னை
- கல்பாக்கம் அணுமின் நிலையம்
- கல்பாக்கம்
- உருக்கு உலை
- தின மலர்
சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 2வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் இயங்கி வருகிற சென்னை அணுமின் நிலையத்தில் 220 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகளிலிருந்து மொத்தம் 440 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவை, மத்திய தொகுப்பிற்கு அனுப்பப்பட்டு அவை மாநில வாரியாக தேவைக்கேட்ப பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2019 ஜனவரி 19ம் தேதி முதலாவது அணு உலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதுநாள் வரை அவை சரி செய்யப்படவில்லை. இதனால், மத்திய தொகுப்பிற்கு அனுப்பப்பட வேண்டிய மின்சாரம் கிடைக்கப்பெறாத நிலையில் தற்ேபாது இயங்கி வந்த 2வது அணு உலையும் நேற்று காலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதானது. இதனால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. …
The post கல்பாக்கம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.