சென்னை: தமிழகம் முழுவதும் நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் நேர்முகத்தேர்வை விரைந்து முடித்து பணி ஆணையை வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் சேட் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தார்.இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் தலைவர், உறுப்பினர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவடைந்து தற்போது நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன் பிறகு பணி ஆணை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விரைவில் நேர்முகத் தேர்வை முடித்து, பணி நியமனம் வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்….
The post நுகர்வோர் நீதிமன்றங்களில் காலி இடங்களை நிரப்பும் பணியை உடனே முடிக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
